Monday, July 25, 2011

மக்களுக்காக நடிக்கிறேன்-விக்ரம்


“நான் என்றுமே விருதுக்காக நடித்தது இல்லை. மக்களுக்காக நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார் நடிகர் விக்ரம்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் மனவளர்ச்சிக் குன்றிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் “தெய்வத்திருமகள்”. நடிகைகள் அனுஷ்கா, அமலாபால், நடிகர்கள் சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருக்கும் இப்பட்த்தில் விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகாக கோவையில் உள்ள ஒரு தி‌ரையரங்கிற்கு வந்த விக்ரம் ரசிகர்களின் முன் உரையாற்றினார்.
அப்போது பேசிய விக்ரம் கூறியதாவது: “இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்த்துபார்த்து செதுக்கப்பட்டது. ஐந்து வயது குழந்தை என்னென்ன செய்யும் என்பதை உடன் இருந்து பார்த்து காட்சிகளை உருவாக்கினார் விஜய்.
படம் வெளியாவதற்கு முன்னர் தெய்வத்திருமகள் போன்ற படங்களை கல்லூரி மாணவர்கள் பார்க்க மாட்டார்கள் என சிலர் கூறினார்கள். ஆனால் இப்படம் வெளியாகி நாட்களாக கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் பேர் விரும்பிப் பார்ப்பதாக திரையரங்க அதிபர்கள் கூறினர்.
ஒருபக்கம் தூள்சாமி போன்ற படங்களையும் ரசிக்கிறார்கள். மற்றொருபக்கம் தெய்வத்திருமகள் போன்ற படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். மொத்தத்தில் படம் நன்றாக இருந்தால் மக்களாகிய ரசிகர்கள் எப்போதும் ரசிப்பார்கள்.
நான் என்றுமே விருதுக்காக நடித்தது இல்லை. மக்களுக்காக நடிக்கிறேன்மக்களின் ரசனைதான் ரொம்ப முக்கியம். கொடுக்கிற காசுக்கு அவர்கள் திருப்திகரமான படத்தை பார்த்தோம் என்று கூற வேண்டும். அதுவே என்னுடைய நோக்கம்” என்றார்.

No comments:

Post a Comment

welcomeee