Tuesday, November 29, 2011

மயக்கம் என்ன- ஒற்றை ஆளாக மொத்தப் படத்தையும் தலையில் தூக்கிச் சுமக்கிறார் தனுஷ்


ரு வெற்றி, ஓர் அங்கீகாரம்... அதற்காக ஏங்கும் ஒருவனைப் பற்றிய கதை என்ற அதே 7 ஜி ரெயின்போ காலனி கதை ஒன் லைனில் வேறொரு பாணியில் எடுத்திருக்கிறார் செல்வராகவன். ஆனால், தனுஷின் உழைப்பு இந்தப் படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.
அமெச்சூர் போட்டோகிராபரான தனுஷுக்கு கனவு மிகப் பெரிய போட்டோகிராபராவதுதான். அவருடைய ஆண்-பெண் நட்பு வட்டத்துக்குள் ஒரு நண்பனின் கேர்ள் பிரெண்டாக நுழைகிறார் ரிச்சா. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் இருவருக்குள்ளும் ஒரு கெமிஸ்ட்ரி ஓடுகிறது. ஒரு கட்டத்தில் அது காதலாக, நட்புக்கு துரோகம் செய்வதாக எண்ணி மறுக்குகிறார் தனுஷ். இதற்கிடையே அவர் எடுத்தப் போட்டோ ஒன்றை தன்னுடையது என்று சொல்லி பேர் வாங்கிவிடுகிறார் ஒரு பிரபல போட்டோகிராபர். தனுஷின் காதல் என்னவானது... தன் துறையில் தனுஷ் ஜெயித்தாரா என்பதே மீதிக் கதை!
ஒற்றை ஆளாக மொத்தப் படத்தையும் தலையில் தூக்கிச் சுமக்கிறார் தனுஷ். ஆரம்பத்தில் விளையாட்டுத் தனமாக அலையும்போதும் அவமானங்களை மென்று விழுங்கிக் கொண்டு அங்கீகாரத்துக்காக அல்லாடும்போதும் தனுஷின் உழைப்பு அபாரமாக இருக்கிறது. காதலை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தவிக்கும் காட்சிகளில் கண்களில் தெரிகிறது அவருடைய உணர்வுகள்! அதேபோல, கால ஓட்டத்தின் மாற்றங்களை அழகாகப் பிரதிபலிக்கிறார்.
ரிச்சாவுக்கு கரிய பெரிய கண்கள்... அதிலேயே ஆயிரம் பக்க வசனங்களைப் பேசிவிடுகிறார். தனுஷுக்கு இணையாக நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர்... அழகாகச் செய்திருக்கிறார்.
தனுஷின் நண்பர்கள் வட்டம் இயல்பாக இருக்கிறது. ரிச்சாவை கேர்ள் பிரெண்டாக நினைத்து பழகி ஏமாந்து நிற்கும் நண்பன் செம ஃபிட்!
படத்தின் இன்னொரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்களில் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்ட ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார். அதிலும் மவுனமாக நிற்கும் பல இடங்களில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிக்கிறது. வெல்டன் பிரகாஷ்!
கதையே போட்டோகிராபரைப் பற்றியது என்பதால் கேமரா மிரட்டுகிறது. இயற்கைக் காட்சிகளாக விரியும் பல இடங்கள் நிஜமான பெயிண்டிங் உணர்வு! ராம்ஜி நூறு சதவிகிதம் உழைத்திருக்கிறார்.
செல்வராகவன் 
நேர்கோட்டில் கதை சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் சினிமா ரசிகனுக்கான தேவைகளுக்காக முன்பாதியில் பல கலகலப்பு எபிசோட்களைச் சேர்த்துவிட்டார். அதனாலேயே சீரியஸாகச் செல்லும் இரண்டாவது பாதி மெதுவாகத் தோன்றுகிறது. காட்சிகள் வேறாக இருந்தாலும் தனுஷ், ரிச்சா இருவருக்குமான உறவும் பிணக்கும்தான் சொல்லப்படுகிறது என்பதால் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. அதனாலேயே ரசிகர்கள் படத்தோடு ஒன்றாமல் தவிக்கிறார்கள்.  இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் செல்வராகவன் இன்னும் அசத்தியிருக்கலாம்!

Thursday, November 17, 2011

விஜய்க்கு நண்பனில் நான்கு கெட்-அப்ஸ்!


ந்திரனுக்குப் பிறகு ஒரு ஆஃப் பீட் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்த இயக்குனர் ஷங்கர்  3 இடியட்ஸ் படத்தை `நண்பனாக` ரீமேக் செய்து முடித்து விட்டார். தற்போது ஜெட் வேகத்தில் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நண்பன் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என ஷங்கர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
 
இதற்கிடையில் நண்பன் படத்துக்காக இத்தாலியில் கடைசியாக படமாக்கப் பட்ட பாடலில் விஜய்யும் இலியானாவும் நடித்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் எந்திரனில் ரஜினியின் சிட்டி   ரோபோ கெட்-
அப்,  கமலின் `இந்தியன் தாத்தா` கெட்-அப் ஆகிய இரண்டு தோற்றங்களில்  விஜய் வருகிறார் என்று தகவல்கள் கசிந்தன.

ஆனால் இயக்குனர் ஷங்கர் இரண்டு அல்ல நான்கு கெட்-அப்புகள் என்று கூறியிருக்கிறார். “அந்தப் பாடலில் ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாத நாலுவித கேரக்டரில் விஜய் வருகிறார். அவை என்ன கெட்-அப்புகள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. சாரி ”என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Friday, November 4, 2011

7 ஆம் அறிவு


எதிர்பார்ப்பு ஈடேறவில்லை என்பதுதான் படம் பார்த்தபின் ஏற்படும் உணர்வு!


நடிகர்கள் : சூர்யா,ஸ்ருதிஹாசன்,ஜானி ட்ரி நுயன்
இசை    : ஹாரீஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு    : ரவி k சந்திரன்
இயக்கம்      : முருகதாஸ்

விண்ணை முட்டும் எதிர்பார்ப்புகளோடு வந்திருக்கும் படம்..! ஆம் அறிவு
மறக்கப்பட்ட தமிழரின் பக்கங்களைச் சொல்லும் படம் என்ற கேப்ஷனும் சூர்யா முருகதாஸ் கூட்டணியும் எதிர்பார்ப்பை எகிற வைத்தனஆனால்எதிர்பார்ப்பு ஈடேறவில்லை என்பதுதான் படம் பார்த்தபின் ஏற்படும் உணர்வு!
சீனாவின் ஷாவ்லின் கோவிலில் தொடங்குகிறது படம்அந்தக் கோவிலில் தெய்வமாக இருப்பவர் தமிழகத்தில் இருந்து சீனாவுக்குச் சென்ற பல்லவ மன்னன் போதி தர்மன் என்ற செய்தியை அடுத்து போதி தர்மன் சீனாவுக்குச் சென்றதும் அங்கே அவர் செட்டில் ஆனதும் காட்சிகளாக விரிகிறது.அப்பட்டமான டாகுமெண்டரிதனம்அதை மேலும் வலுப்படுத்துவது போல இருக்கிறது பின்னணி குரல்!
அந்த போதி தர்மன் கற்றுத் தந்த நோக்கு வர்மம்தற்காப்புக் கலையில் தேர்ந்த ஒருவன் சீன அரசின் ஆணைப்படி (சென்சாரில் மியூட் பண்ணினாலும் சீன அரசு என்பது புரிகிறதுதமிழர்களை... குறிப்பாக ஸ்ருதிஹாசனைக் கொல்ல வருகிறான் என்று கதையை ஆரம்பிக்கிறார் முருகதாஸ்அவரை ஏன் கொல்ல வேண்டும் என்றால் ஸ்ருதிதான் டி.என்.ஆராய்ச்சி மூலமாக போதி தர்மனின் வழித் தோன்றல்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்அவருடைய ஆராய்ச்சியால் இந்தியாவில் பரவ விடத் திட்டமிட்டிருக்கும் நோய் கிருமிகள் பரவாமல் போய்விடுமோ... அதை வைத்து பிசினஸ் பண்ண நினைக்கும் தன் திட்டம் பாழாகிவிடுமோ என்ற சீனாவின் பயம்தான் காரணம்போதி தர்மனின் வழித் தோன்றல் மூலம் அவரை மீண்டும் உருவாக்கி பயோ வார் நடத்தத் திட்டமிடும் சீனாவை எப்படி முறியடிக்கிறார் ஸ்ருதி என்பதுதான் படம்!
சொல்லும்போது கோர்வையாகத் தெரிந்தாலும் படத்தில் இவ்வளவு கோர்வை இல்லை. டாகுமெண்டரி ஃபீலிங்கில் படம் நெடுக சரித்திர, விஞ்ஞான, மருத்துவ, மரபணுச் சோதனை பற்றிய கருத்துகளை யாராவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலவீனமே இந்த விவரணைகள்தான்..! அதிலும் ஆரம்பக் காட்சிகளாக வரும் போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றுப் பாடம் என்றால் கடைசியாக வரும் போதி தர்மன் மறு உருவாக்கம் அப்படியே தலைசுற்றும் சயின்ஸ் கிளாஸ்! எங்கே புரியாமல் போய்விடுமோ என்ற கவலையில் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்ன விதத்தில் முருகதாஸுக்கு வெற்றிதான். ஆனால், எல்லாம் புரியுது... ஆனா, சுவாரஸ்யமாக இல்லையே என்று கடைக்கோடி ரசிகன் சொல்வது அவருக்கு மைனஸ்தான்!
போதி தர்மன் மற்றும் அவருடைய வழித் தோன்றலாக அரவிந்தன் என்ற சர்க்கஸ் கலைஞன் ஆகிய வேடங்கள்
சூர்யாவுக்கு! உடலை இறுக்கமாகக் கட்டி வைத்துக் கொண்டு அழகுப் போட்டி ரேஞ்சுக்கு அங்கும் இங்கும் நடக்கிறார். போதி தர்மன் வேடத்துக்கான உழைப்பின் களைப்பு அரவிந்தன் வேடத்தில் தெரிகிறது. பொலிவு மிஸ்ஸிங் சார்! கவனமாக இருங்க! சர்க்கஸ் கலைஞராக அவருடைய உழைப்பு அபாரமாக இருக்கிறது. மற்றபடி ஆட்டம் பாட்டம், ஆக்‌ஷன் காட்சிகளில் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கியிருக்கிறார். படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்னால் இருபது நிமிடங்கள் சூர்யா இல்லவே இல்லை... ஸ்ருதி மீதுதான் பயணிக்கிறது. கதை. ஆனால், க்ளைமாக்ஸ் சண்டையில் ஸ்கோர் பண்ணிவிட முடியும் என்ற தைரியத்துக்கு பாராட்டலாம்.
ஸ்ருதி அழகாக இருக்கிறார். தமிழ்தான் கொஞ்சம் தடுமாறுகிறது. சூர்யாவின் பக்கத்தில் நிற்கும்போது உயரமாக இருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறார். எக்ஸ்பிரஷன் ஏரியாவில் அப்பாவிடம் கொஞ்சம் க்ளாஸ் வைத்துக் கொள்ளுங்கள் மேடம்!
படத்தின் அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டு செல்பவர் வில்லன் ஜானி ட்ரி நுயன் தான்! அமர்த்தலான அவருடைய நடையும் வசியம் செய்யும் கண்களும் அவருக்கு பெரும் பலம். மிகக் குறைவான வசனங்களோடு அவர் படம் நெடுக அசத்துகிறார்.ஹாரீஸின் இசையில் பாடல்களில் பழைய வாசனை..! படத்துக்கு பெரும் ஸ்பீட் பிரேக்கர்கள்!
பீட்டர் ஹெயினின் சண்டைக்காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.மிக விளக்கமாகவும் விவரணையோடும் பல விஷயங்களைச் சொல்லியிருந்தாலும் மனதுக்குள் எழும் சில ஏன்... எதற்கு... எப்படிகள்..?
ஸ்ருதிஹாசன் சூர்யாவை பின் தொடர்வது போலவே தெரியவில்லையே... அவர்தான் ஸ்ருதியின் இலக்கு என்னும்போது சும்மா இருப்பதும் சூர்யா அவரைத் தேடி அலைவதுமாக இருப்பது ஏன்..?இந்தக்கதைக்கு நடுவே இலங்கைத் தமிழர் விவகாரத்தையெல்லாம் இழுக்கிறீர்களே... எதற்கு..?
சீனாவில் இருந்து வந்து இறங்கும் வில்லன் ஜானி சென்னையிலேயே புழங்கிய ஆட்டோகாரர் ரேஞ்சுக்கு சந்து பொந்தெல்லாம் செல்ஃப் டிரைவிங்கில் சுற்றி வருவது எப்படி..?
முருகதாஸ் கடுமையாக உழைத்திருக்கிறார்... ஏராளமான தகவல்களை திரட்டியிருக்கிறார்... அவை எல்லாவற்றையும் வீணாக்காமல் கொட்டிவிட நினைத்துவிட்டார்... அங்கேதான் சிக்கலாகி விட்டது.
watch the awesme song........
and ur comments pls...........
http://www.youtube.com/watch?v=ww9eqUUT018

Tuesday, November 1, 2011

வேலாயுதம் உண்மையிலேயே அதிரடி மசாலாதான்!


நடிகர்கள்: விஜய்,ஜெனிலியா,ஹன்சிகா மோத்வானி,சந்தானம் மற்றும் பலர்
இசை    : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு    : பிரியன்
இயக்கம்      : ஜெயம் ராஜா


நீண்டநாட்களாக ஒரு அதிரிபுதிரி வெற்றிக்காகக் காத்திருக்கும் விஜய் நடித்திருக்கும் படம். அரசியல், அடுத்தடுத்த பிரச்னைகள் என்று சிக்கித் தவித்துக் கொண்டிருந்த விஜய்க்கு உடனடி ரிலீஃபாக வந்திருக்கும் வேலாயுதம் உண்மையிலேயே அதிரடி மசாலாதான்!

பல ஆண்டுகளுக்கு முன்பே ப.திருப்பதிசாமி கதை திரைக்கதை இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆசாத் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டு வேலாயுதத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜா.

தமிழகத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகள் அதற்காக உள்துறை அமைச்சரின் உதவியோடு சென்னையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள். அதன்படி பள்ளிக்கூட பஸ்ஸில் முதல் குண்டு வெடிக்கவும் செய்கிறது. சென்னையில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருக்கும் ஜெனிலியா இந்த கும்பலின் அராஜக வேலை ஒன்றை துப்பறிய அவரைக் குத்திக் கிழிக்கிறார்கள் மூன்று அடியாட்கள். ஜெனிலியாவிடம் அடுத்த வெள்ளியன்று இன்னொரு குண்டு வெடிக்கும் என்ற தகவலையும் சவடாலாகச் சொல்கிறார்கள். அவர்கள் செல்லும் காரில் இருக்கும் பெட்ரோல் பைகள் வெடிக்க, மூவரும் இறக்கிறார்கள். கத்திக்குத்து காயத்தோடு கிடக்கும் ஜெனிலியா ஒரு பேப்பரில் வெள்ளிக்கிழமை நடக்கப் போகும் குண்டு வெடிப்பைத் தடுப்பேன்... எதிரிகள் தப்ப முடியாது என்று எழுதி கீழே வேலாயுதம் என்று எழுதி வைக்கிறார். யார் அந்த வேலாயுதம் என்ற பரபரப்பு எழுகிறது.

பவுனூர் என்ற கிராமத்தில் அண்ணன் தங்கை பாசத்துக்கு இலக்கணமாக இருக்கும் விஜயும் சரண்யா மோகனும் சென்னைக்கு ரயில் ஏறுகிறார்கள். விஜய் பெயர் வேலாயுதம். மாமா, அத்தை, மாமா மகள், நண்பர்கள் சகிதம் சென்னை வந்து இறங்கும் விஜய், தங்கையின் பையைத் திருடும் திருடனைப் பிடிக்க பார்சலில் வந்த பைக்கை எடுத்துக் கொண்டு துரத்துகிறார். விஜயைத் துரத்தும் போலீஸ்காரர் விஜயிடம் பேர் கேட்க, வேலாயுதம் என்று சொல்கிறார். ஸ்டேஷனுக்கு வெளியே கொண்டு விடப்பட்ட பைக் வெடிக்கிறது. வேலாயுதம் புகழ் மேலும் அதிகமாகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற தற்செயல் சம்பவங்கள் நடக்கின்றன. வில்லன் குரூப் குழப்பமாகிறார்கள். விஷயம் தெரிந்த ஜெனிலியா விஜயை வேலாயுதமாக்க திட்டமிடுகிறார். விஜய் மறுக்கிறார்.

இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதைத் தெரியாமல் இருக்க நீங்க்ள் ஒன்றும் பச்சைக்குழந்தை இல்லை என்பதால் இதற்கு மேல் கதை வேண்டாம்!

வேலாயுதமாக விஜய் வெளுத்துக் கட்டியிருக்கிறார். தங்கை பாசத்தைப் பொழியும் கிராமத்து காட்சிகளில் காமடியில் பின்னி எடுக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனல் பறத்துகிறார். பாடல் காட்சிகளில் சுழன்று ஆடுகிறார். எமோஷனலாக காட்சிகளில்தான் கொஞ்சம் தடுமாறுகிறார். ஆனால், தன் பலம் என்ன என்பதைத் தெரிந்து விளையாடியிருக்கும் விஜய்க்கு இந்தப் படம் ஒரு மைல் கல்தான்!

ஒன்றுக்கு இரண்டாக நாயகிகள்... ஜெனிலியாவுக்கு கொஞ்சம் கதையோடு ஒட்டிய கேரக்டர்... அதனால் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஹான்சிகா மொத்வானிக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே வேலை... படத்தில் விஜய் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று... நான் சும்மாவே காட்டுவேன்... நீ காட்டு காட்டுனு கேட்டா... என்ன பண்றது என்று இருக்கிறது. அது ஹான்சிகா மொத்வானிக்குத்தான் ரொம்பப் பொருத்தம்... சும்மா காட்டு காட்டு என்று காட்டுகிறார்! வெண்ணெய் போல இருக்குது பொண்ணுங்கற வசனத்தை ரொம்ப நாளைக்கு பேசமுடியாது அம்மணி... கொஞ்சம் நடிக்க ஆரம்பிச்சுடுங்க!

காமடிக்கு குத்தகை சந்தானம்... விஜயோடு சேர்ந்திருக்கும் போதும் தனியாவர்த்தனம் செய்யும்போதும் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். திருடனாக மாறுவதற்கு அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அம்பேல் ஆகும்போது சிரிப்பு பீறிடுகிறது. வசனங்களில் கவுண்டமணி வாரிசாகவே மாறிவிட்டார். செம கலாய்ப்பு!

அந்நிய சக்திகளாக வரும் வில்லன்கள்தான் ஒட்டவே இல்லை... உள்ளூர் உள்துறை அமைச்சருக்குக் கூட தெரியாத முகம் வருவது ஒட்டாமல் போகிறது. வில்லன் சரியில்லாததால் ஹீரோயிசமும் கொஞ்சம் வீக் ஆகிறது. ஆனால், அதை உணராத அளவுக்கு எமோஷனலாக இருக்கும் காட்சிகளால் கொஞ்சம் தப்பிக்கிறது.

சரண்யா மோகன், சாயாஜி ஷிண்டே, எம்.எஸ். பாஸ்கர், சூரி, இளவரசு, ராகவ் என்று பெரிய பட்டியலாக இருந்தாலும் எல்லோருடைய கேரக்டர்களும் மனதில் நிற்கும் வகையில் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

இசை விஜய் ஆண்டனி... வழக்கம்போல குத்துப் பாடல்களால் கும்மாளம் போட்டிருக்கிறார்... விஜய் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் துள்ளல் இசை! ஆனால், வெரைட்டி மிஸ்ஸிங்!

வசனம் சுபா... ஒரு மசாலா படத்துக்கு என்ன அளவு தேவையோ அந்த அளவு இருக்கிறது. வெல்டன்! அதிலும் கூரைமீது விஜய் ஓடும்போது ஓடு சரிந்து கீழே பேசும் கட்சிக்காரரின் தலையில் விழுகிறது. இது எதிர்கட்சிக்காரர்களின் சதி என்று அவர் குற்றம் சாட்ட விஜய் உடனே, நல்லவேளை நான் ஆளுங்கட்சி என்று டைமிங்கில் சொல்வது ஜர்னலிஸ்டிக் டச்! அதேபோல், வில்லனை மடக்கும் போலீஸ் காரர் முஸ்லீம் என்று தெரிந்ததும் அவன் நான் நீங்க நல்லாயிருக்கணும்னும் சேர்த்துதான் போராடுறேன் என்று சொல்ல பதிலுக்கு அந்த போலீஸ் அதிகாரி, நாங்க நல்லாத்தான் இருக்கோம்... உங்களுக்கு புடிச்சவனா இருந்தாலும் பின்லேடனை உங்களால் பாதுகாக்க முடியலை... எங்களுக்கு புடிக்கலைன்னாலும் கசாப்பை நாங்க பத்திரமாகத்தான் பாத்துக்கறோம் என்று பொலிடிகலாகவும் பஞ்ச் அடிக்கிறார்கள் வசன இரட்டையர்கள்!

மாஸ் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் சர்வ இலக்கணங்களோடு நூறு சதவிகிதம் பொருந்திப் போகிற திரைக்கதையை அமைத்திருக்கும் எம்.ராஜாவுக்கு இது மிக முக்கியமான படம். கொஞ்சம் அளவு மிஞ்சியிருந்தாலும் அலுப்பு தட்டாத வகையில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தே படைத்திருக்கிறார்.

இந்த தீபாவளியில் வேலாயுதம் தவுசண்ட் வாலா பட்டாசாக வெடித்திருக்கிறது!

 

Sunday, October 9, 2011

முரண்-புதிய இயக்குனர் ராஜன் மாதவ் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்.

 நடிகர்கள்: பிரசன்னா, சேரன், ஹரிப்ரியா, நிகிதா, சுமா, ஜெயபிரகாஷ், மற்றும் பலர்
இசை: சாஜன் மாதவ்
இயக்கம்  :  ராஜன் மாதவ்
தயாரிப்பு   & வெளியீடு : டீரீம் தியாட்டர்ஸ் & யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ்




னக்கு அப்பா சரியில்லை... உனக்கு மனைவி சரியில்லை... இருவரையும் போட்டுத் தள்ளிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே என்று வழியில் சந்திக்கும் பிரசன்னா சேரனிடம் சொல்லும் ஒரு வரிதான் படத்துக்கான ஆதாரம்!

புதிய இயக்குனர் ராஜன் மாதவ் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார். ஆனால், விறுவிறுப்பாகச் சொல்ல வேண்டியதை கொஞ்சம் இழுவையாகச் சொல்லியிருப்பதுதான் சறுக்கலாக இருக்கிறது.

சேரனும் பிரசன்னாவும் பெங்களூர் சென்னை ஹைவேயில் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது பரஸ்பரம் தங்கள் வாழ்க்கைப் பிரச்னையைச் சொல்லிக் கொள்ள, எதிலேயும் ரிஸ்க் எடுப்பதை விரும்பும் பிரசன்னா சேரனின் மனைவியைக் கொலை செய்து அவருக்கு உதவுவதாகச் சொல்கிறார். பதிலுக்கு தனக்கு துரோகம் செய்த தந்தையைக் கொல்லச் சொல்கிறார். சொன்னபடி பிரசன்னா செய்துவிட, சேரன் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறார். இந்தச் சூழலை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் முரணின் மொத்த வடிவம்.

சேரனுக்கு அல்வா கதாபாத்திரம். சதா சோக முகத்தோடு வலம் வருகிறார். ஆரம்பத்தில் மனைவி கொடுமையால் சோகம்... அவர் இறந்த பிறகு பிரசன்னா கொடுமையால் சோகம். மற்ற உணர்ச்சிகள் மல்லுக்கட்டத்தான் செய்கின்றன.
 
பிரசன்னா கதையில் வில்லன் என்றாலும் படத்தில் ஹீரோ. எல்லா வில்லத்தனங்களையும் தான் செய்துவிட்டு அப்பாவைப் போட்டுத்தள்ள பிளான் போடும் பணக்கார பிள்ளையாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார். வில்லனாக ஒரு வலம் வரலாமே பிரசன்னா!

நாயகியாக ஹரிப்ரியா..! சேரனின் வழக்கமான நாயகிகள் வரிசையில் தன்னம்பிக்கை கொடுப்பவராக வந்து போகிறார்.

படத்தின் இசை சாஜன் மாதவ். பல இடங்களில் கிடார் உலுக்குகிறது. பாடல்கள் ஓகே ரகம்!
 
இவ்வளவு கேடியாகத் திட்டமிடும் பிரசன்னா எதற்காக அப்பாவி சேரனை கொலைக்கருவியாகப் பயன்படுத்த வேண்டும். அவரே ஒரு ஆள் வைத்து அப்பாவைப் போட்டுத் தள்ளியிருக்கலாமே என்ற ஆதாரக் கேள்வி அடிக்கடி உறுத்துகிறது. அதற்கு பதில் இல்லை!
அதுதான் முரண்..!


         RATING

Saturday, September 24, 2011

ஆயிரம் விளக்கு-மதுரை, ரவுடி, போலீஸ், என்கவுண்டர் என்ற மசாலாக்களோடு வந்திருக்கும் மற்றொரு படம்!


நடிகர்கள்     : ஷாந்தனு பாக்கியராஜ், சானாக்கான், சத்தியராஜ், கஞ்சா கருப்பு,         மற்றும் பலர்
இசை             : ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்      : எஸ்.பி.ஹோசிமின்
தயாரிப்பு     : எச்.எம்.ஐ .பிக்ச்சர்ஸ்
 
மதுரை, ரவுடி, போலீஸ், என்கவுண்டர் என்ற மசாலாக்களோடு வந்திருக்கும் மற்றொரு படம்!


துரையில் வாழும் ரவுடி சத்யராஜ் மக்களுக்கு முகம் காட்டாத மனிதராக வாழ்ந்துவருகிறார். அவரை என்கவுண்டரில் போடச் சொல்லி போலீஸ் டீம் வலியுறுத்த கமிஷனர் அனுமதி மறுக்கிறார். கூடவே மூன்று மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறார். இந்த மூன்று மாத இடைவெளியில் சத்யராஜ் தன் கனவு புராஜெக்ட்டான மில் கட்டும் வேலையைத் தொடங்க, அதற்கான இடத்தில் உள்ள வீடுகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள் அவருடைய ஆட்கள். இதில் ஒருவர் மட்டும் விலைக்குத் தரமாட்டேன் என்கிறார். அந்த ஒருவர்தான் சாந்தனு.

இந்த டீலிங்கின்போது சாந்தனு ஏதோ சத்யராஜின் ரைட் ஹேண்ட் என்பதுபோன்ற தோற்றம் மற்றவர்களுக்கு வந்துவிட, சாந்தனு அதை மெயிண்டெய்ன் பண்ணுகிறார். இன்னொருபக்கம் சாந்தனுவின் நற்குணங்களைப் பார்க்கும் சத்யராஜ் அவர்மீது பாசமாகி கண்ணாயிரம் என்ற பெயரில் அவரோடு பழகுகிறார். இப்படிப் போகும் கதையில் நடுவே சாந்தனுவுக்கும் சனாகானுக்கும் இடையே காதல்! சத்யராஜ் யார் என்ற உண்மை சாந்தனுவுக்கு தெரிந்ததா... சத்யராஜ் ரவுடியிசத்தைவிட்டு வெளியே வந்தாரா என்பதெல்லாம்தான் ஆயிரம் விளக்கு!

பழகிப் போன கதை என்பதுகூடப் பரவாயில்லை... பழகிய பாதையிலேயே பயணிக்கிறது என்பதுதான் அலுப்பாக இருக்கிறது.

சத்யராஜ் தன் இயல்பான தோற்றத்தில் வருகிறார். ஆரம்ப சண்டையின் ஆக்ரோஷத்திலும் அடுத்து வரும் காட்சிகளில் சாந்தனுவிடம் பணிவு காட்டும்போதும் அனுபவம் பேசுகிறது.

சாந்தனுவுக்கு முகபாவங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. உடல் மொழியிலும் கொஞ்சம் கடினமாகத்தான் தோன்றுகிறார். கொஞ்சம் உடம்பைக் குறைத்து முகபாவங்களை ஏற்றினால் நன்றாக இருக்கும்.

சாந்தனு படத்தில் அடிக்கும் கமெண்ட் போலத்தான் சனாகான் ஜப்பான் மூக்கும் சைனா முழியுமாக வருகிறார். பெரிதாக இம்ப்ரஸ் பண்ணவில்லை.

பாடல்கள் ஸ்ரீகாந்த் தேவா! வழக்கமான பாணியில் வந்து போகிறது.

இயக்குனர் ஹோசிமின் ஷங்கரின் தயாரிப்பு. ஆனால், அவரிடமிருக்கும் சின்னச் சின்ன சர்ப்ரைஸ்களை இவரிடம் காணவில்லை.

அடுத்த முறையாவது அதை எதிர்பார்க்கலாமா சார்?!

Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும்..!தினசரி செய்தித்தாளில் பார்த்துப் பழகிப் போன செய்திதான் படத்தின் ஒருவரிக் கதை!


தினசரி செய்தித்தாளில் பார்த்துப் பழகிப் போன செய்திதான் படத்தின் ஒருவரிக் கதை! எதிர் எதிர் திசைகளில் பயணிக்கும் இரு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் விபத்தும் அதன் விளைவுகளும்தான் கதை! ஆனால், இனி விபத்து செய்திகளைப் படித்தால் உடனே தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை உண்டாக்கியிருப்பதுதான் இந்தப் படத்தின் முக்கியமான அம்சம்!

தினமும் நாம் பார்க்கும் முகங்கள்தான்... ஊடலுக்குப் பின் சமாதானமாகி ஊருக்குச் செல்லும் காதல் ஜோடி, காதலியைத் தேடி வந்துவிட்டு ஊர் திரும்பும் காதலன் ஆகிய மூவரும் ஒரு பஸ்ஸில் திருச்சியில் இருந்து புறப்படுகிறார்கள். இன்னொருபக்கம் காதலனை எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு சென்னையில் இருந்து பஸ் ஏறுகிறாள் ஒரு காதலி. இந்த இரண்டு பஸ்களும் விழுப்புரத்தைத் தாண்டி மோதிக் கொள்கின்றன. காதல் ஜோடி என்ன ஆனது..? காதலன், காதலி சந்தித்தார்களா என்பதுதான் கதை!
முதல் காட்சியிலேயே மோதலைக் காட்டிவிட்டு, ஆறு மாதங்களுக்கு முன் என்று பின் கதைக்குச் சொல்கிறார் இயக்குனர். அதில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் அனன்யா சூழல் காரணமாக சரவ்வுடன் பயணிக்க வேண்டிய நிலையும் அந்த இருவருக்குள்ளும் ஏற்படும் ரசாயன மாற்றங்களும் காட்சிகளாக விரிகின்றன. நிகழ்காலத்துக்கு வரும்போது சரவ் திருச்சியில் இருந்தும் அனன்யா சென்னையில் இருந்தும் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

இன்னொருபக்கம்  ஜெய் அஞ்சலி ஜோடி திருச்சியில் இருந்து பஸ் ஏறுகிறார்கள். அவர்களின் பின் கதையில் ஜெய் அப்பாவித்தனமாகவும் அஞ்சலி துடுக்கான துணிச்சலான பெண்ணாகவும் இருப்பது கதையின் சுவையைக் கூட்டுகிறது. அவர்களுக்குள் அறிமுகம் ஏற்படுவது, பல சோதனைகளைக் கடந்து ஜெய் காதலை அஞ்சலி ஏற்பது, அம்மாவிடம் அறிமுகம் செய்ய அழைத்துச் செல்வது என்று பயணிக்கிறது கதை.

இதற்கு நடுவே பிரியமான கணவன் மனைவி, வெளிநாட்டில் வேலை பார்த்து மகளை முதன்முதலாகப் பார்க்கச் செல்லும் தகப்பன், கண்களால் பேசி, கலந்து மொபைல் எண்களைப் பறிமாறிக் கொள்ளும் அளவுக்கு வளரும் பயணக் காதல் ஜோடி, வெற்றிக் கோப்பையோடு வரும் பெண் பிள்ளைகள் என்று பல முகங்கள் நான் பார்த்த ஆனால், மனதில் பதிய மறுத்தவை. இனி, அழுத்தமாகப் பதியும் அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக்கி இருக்கிறார் புதிய இயக்குனர் சரவணன்.

அவருக்கு  முழு பலமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அவர் காட்டும் கோணங்களும் அசைவுகளுமே ஆயிரம் கதைகளைச் சொல்கிறன. அதற்கு பக்கபலமாகப் பயணிக்கிறது இசை. புதியவர் சத்யா, பாடல்களிலும் பின்னணியிலும் முன்னணிக்கு வந்திருக்கிறார்.

ஜெய், அஞ்சலி, அனன்யா புதுமுகம் சரவ் ஆகிய நால்வருமே கொஞ்சமும் மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள். அதிலும் ஜெய் அஞ்சலி ஜோடி கலகலப்பு என்றால் சரவ் அனன்யா ஜோடி ஆழ்ந்த அமைதி!

கனமான க்ளைமாக்ஸ் என்றாலும் அதுவரையில் கலகலப்பாக நகர்த்திச் செல்லும் திரைக்கதை படத்துக்கு மிகப் பெரிய பலம். அதேபோல, பல இடங்களில் பளிச்சென்று இருக்கிறது வசனம். தமிழ் சினிமாவுக்கு  நல்ல வரவாகச் சொல்லலாம் சரவணனை!
படத்தின் மைனஸாகச் சொல்வதாக இருந்தால் திரும்பத் திரும்ப வரும் சில காட்சிகளைச் சொல்லலாம்.
ஆசை மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவருடனே பயணிக்கும் கணவன் பஸ்ஸை விட்டு இறங்குவதும் மீண்டும் ஏறுவதும் அடிக்கடி வருவது கொஞ்சம் அலுப்பு. அதேபோல ஜெய் அஞ்சலி காட்சிகளின் நீளம்... சுவாரஸ்யம் என்றாலும் கதை நகராமல் இருப்பதால் கொஞ்சம் சலிப்பு வருகிறது.

மற்றபடி எங்கேயும் எப்போதும் நடக்கும் விபத்துதான் என்றாலும் தமிழ் சினிமாவில் இந்த விபத்து அடிக்கடி நடக்க வேண்டும்!

Tuesday, September 6, 2011

மங்காத்தா... இரண்டாவது பாதி உள்ளே... முதல் பாதி வெளியே..!


ஜீத் நடிக்கும் 50 வது படம்! பூஜையில் இருந்தே நெகட்டிவ் ரோல் என்ற அறிவிப்போடுதான் படம் ரெடியானது என்பதால் எந்த அளவு நெகட்டிவ் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டிய படம்!

ஆனால், ஒரு துளிகூட கருணையோ இரக்கமோ இல்லாத பணம் மட்டுமே ஆசையாக அலையும் ஒரு பேராசைக்காரனின் பாத்திரம் ரொம்பவே புதிதாக இருக்கிறது. மாஸ் ஹீரோவான ஒருவர் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அதில் கொஞ்சமும் பின் வாங்காமல் நடித்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான்!

ஐ.பி.எல். போட்டியின் ஃபைனல் போட்டிக்காக நடத்தப்படும் சூதாட்டத்துக்காக ஒரு கிளப்புக்குக் கொண்டுவரப்படும் 500 கோடி ரூபாயை நடுவில் அடித்துக்கொண்டு போக திட்டமிடும் ஐவர் குழுவின் அட்டகாசம் ஒருபக்கம்... இந்த சூதாட்டத்தைக் கண்டுபிடிக்க ஊர் ஊராகப் போராடும் போலீஸ் அதிகாரி அர்ஜூன் இன்னொரு பக்கம்...

இந்த உள்ளே வெளியே மங்காத்தாவில் யாருக்கு வெற்றி என்பதுதான் மங்காத்தா!
க்ரே தலைமுடி... நாலுநாள் தாடி... சதா புகையும் சிகரெட்... எந்நேரமும் குடித்துக் கொண்டே இருப்பது என்று முழு வில்லன்! அதிலும் பணத்துக்காக எதையும் செய்யும் ஆள். த்ரிஷாவைக் காதலிப்பது, நண்பர்களோடு கூத்தடிப்பது என்று எல்லாவற்றிலும் சுயநலம் கடைவாயோரம் ஒழுகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் அடியாளிடம் கன்னத்தில் பளாரென்று அடி வாங்குவது, அர்ஜூனை ஆக்‌ஷன் கிங் என்று பாராட்டுவது, பிரேமுடன் சரிக்கு சரி காமெடி செய்வது, பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு திருதிருவென்று விழிப்பது என்று ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடித்திருக்கிறார். அதேபோல வீண் புகழ்ச்சியும் இல்லை! வெல்டன்!

நாயகிகளில் த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்று எல்லோருக்குமே ஊறுகாய் ரோல்தான். ஆனாலும் சரியான இடத்தில் சரியான அளவில் வந்து போகிறார்கள்.

அர்ஜூன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் க்ளைமாக்ஸ் திருப்பம் நிச்சயம் எதிர்பாராத அதிரடிதான்!

பிரேம்ஜி, வைபவ், சுப்பு, ஜெயபிரகாஷ் என்று ஏகப்பட்ட நடிகர்கள்... எல்லோரையும் ஒன்றாக அறிமுகப்படுத்தி அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் பாராட்டலாம்.
யுவன் பாடல்களில் ராஜ வாசனை..! ஆனாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
சக்தியின் ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே வழக்கம் போல அசத்தல்!

எழுதி இயக்கியிருக்கும் வெங்கட் பிரபு சூதாட்டத்தின் பொருளாதாரத்தையோ அந்த உலகத்து நடவடிக்கைகளையோ கொஞ்சமும் கவலைப்படாமல் அதில் கிடைக்கும் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கதை பண்ணியிருக்கிறார். முதல் பாதியில் இலக்கின்றி அலையும் கதை இரண்டாவது பாதியில் வேகம் எடுக்கிறது.

மங்காத்தா... இரண்டாவது பாதி உள்ளே... முதல் பாதி வெளியே..!

Tuesday, August 30, 2011

யுவன் யுவதி சந்தானத்தைக் கொண்டு வந்ததால் நாம் பிழைத்தோம்!


ட்டாய கல்யாணத்தில் இருந்து தப்பிக்க அமெரிக்கா செல்ல நினைக்கும் யுவனும் காதலித்தவனைக் கல்யாணம் செய்துகொள்ள அமெரிக்கா செல்ல நினைக்கும் யுவதியும் அமெரிக்க தூதரக வாசலில் சந்தித்துக் கொண்டால் எப்படியிருக்கும்? என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் (கதை வசனம்) சுவாரஸ்யமான கற்பனைதான் கதை! ஆனால், இதைச் சொன்ன விதத்தில் அத்தனை அசமஞ்சம்!

உசிலம்பட்டிக்காரனான பரத் ஊரையே வெறுக்கிறார். காரணம் அவங்க காட்டுமிராண்டிப் பய கூட்டம் என்பதுதான். அதனால் அவர் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆக நினைக்கிறார். அதற்கான முயற்சியில் இருக்கும்போது ரீமா கலிங்களைச் சந்திக்கிறார். அவரும் அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வந்தவர். பாஸ்போர்ட் தொலைந்து போக, விசா மறுக்கப்படுகிறது. வரிசையில் நிற்கும்போதே சண்டையிட்ட இருவரும் மேலும் முறைத்துக் கொள்கிறார்கள். ஆனால், பரத் ரீமா மீது காதல் வசப்படுகிறார். பாஸ்போர்ட் வாங்க ரீமா ஏதேதோ கோமாளித்தனங்களைச் செய்கிறார். கடைசியில் போலீஸில் புகார் செய்ய, அங்கே வரும் பரத் தான் உதவுவதாகச் சொல்ல இருவரும் ஒன்றாகச் சுற்றுகிறார்கள்.
நடுவே பரத்தின் அப்பா சம்பத், பரத்துக்கு நீதிபதியின் மகளை பார்த்து  பேசிமுடிக்க பரத், அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறார். ஆனால், வலுக்கட்டாயமாக அவரை உசிலம்பட்டிக்கு அழைத்துச் செல்லும் சம்பத், தன் மகனின் காதலி என்று நினைத்து ரீமாவையும் அடைத்து வைக்கிறார். பரத் அதைக் கேட்டு ஓடிச் சென்று ரீமாவை மீட்க, அவரோ பரத் மீது கோபத்தை வீசிவிட்டுச் சென்றுவிடுகிறார். (ஹலோ... இங்கே இடைவேளைதான்... அதுக்குள்ளே டயர்ட் ஆகிட்டா எப்படி?)

பத்து மாத இடைவெளிக்குப் பிறகு சம்பத் தன் மகனைத் தேடிக் கொண்டிருக்க செஷல்ஸ் தீவில் செட்டில் ஆகியிருக்கிறார் பரத். அங்கே திரும்பவும் ரீமாவைச் சந்திக்க நேரிடுகிறது. மறுபடியும் காதலைப் புதிப்பித்து உசிலம்பட்டிக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார்.

சுவாரஸ்யமான முடிச்சை ஜவ்வு இழுவை இழுத்து நம்மைச் சோதித்து விடுகிறார் படத்தின் இயக்குனர் குமரவேல். காட்சிகளில் எந்தப் புதுமையும் இல்லாமல் பரபரப்பும் இல்லாமல் சவசவ என்று நகருகிற கதையில் பரத்தின் நண்பனாக வரும் சந்தானம்தான் ஒரே ஆறுதல்! நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு செஷல்ஸ் தீவுக்கும் சந்தானத்தைக் கொண்டு வந்ததால் நாம் பிழைத்தோம்!

பரத் ரொம்ப மெனக்கெடாமல் வந்து போகிறார். இந்த படத்துக்கு இவ்வலவு போதும் என்று நினைத்துவிட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு மிக மெத்தனமான நடிப்பு. பாடல் காட்சிகளில் நடனம் ஆடும்போது மட்டும் கொஞ்சம் உற்சாகம் தெரிகிறது.ரீமா கலிங்கள் இந்தப் படத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத சாய்ஸ். பல நேரங்களில் பரத்துக்கு சீனியராகத் தோற்றம் தருகிறார். 

படத்தின் பெரிய ரிலீஃப் சந்தானம்தான். அதிலும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் அடிக்குரலில் கத்தாமல் இருப்பது பெரிய ஆறுதல். என்னதான் சச்சின் டெண்டுல்கர் கொச்சினில் வந்து செட்டில் ஆனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கர்னு கூப்பிட மாட்டாங்க என்கிற ரேஞ்சில் அவர் அடிக்கும் பஞ்ச்சுக்கு தியேட்டர் நாற்காலிகளே சிரிக்கின்றன.

இசை விஜய் ஆண்டனி. இரைச்சல்தான் அதிகமாக இருக்கிறது பின்னணி இசையில்! பாடல்களில் மறக்காமல் இருப்பதால் கொஞ்சம் மனதில் நிற்கும் மெலடி!திரைக்கதையில் பெரிய பெரிய ஓட்டைகள் இருப்பதால் படம் ஒட்டவே இல்லை. குமரவேல் சார்... ஸாரி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

Friday, August 19, 2011

ரௌத்திரம்-பழகு என்ற தாத்தாவின் வார்த்தைகளை கடைசிவரை கடைபிடிக்கும் நாயகனின் கதை.


ரௌத்திரம் பழகு என்ற தாத்தாவின் வார்த்தைகளை கடைசிவரை கடைபிடிக்கும் நாயகனின் கதை. ஆனால், காலத்துக்கு ஏற்பவும் இடத்துக்கு ஏற்பவும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் போனால் ரௌத்திரம் ரவுடித்தனமாகிவிடும் என்பதைச் சொல்லாமல் விடுவதால் கதையில் ஈர்ப்பு குறைவாக இருக்கிறது.

அடிதடி நாயகனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆசைப்பட்டிருக்கும் ஜீவாவுக்கு கோ படத்துக்குப் பிறகு வந்திருக்கும் படம். குறும்பு கொப்பளிக்கும் நாயகனாக பல படங்
களில் வலம்வந்த ஜீவா இந்தப் படத்தில் அதிக வசனங்கள் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார். அநியாயத்தைக் கண்ட இடத்தில் தட்டிக் கேட்கும் கேரக்டர். அதனால், குடும்பத்துக்கு சிக்கல் என்று வரும்போது வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த இடத்தில் அவருடைய நடிப்பில் அபாரமான அழுத்தம்! ஆனால், க்ளைமாக்ஸில் வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக மாறிப் போனதால் அதுவரையில்  செய்த அத்தனையும் அடிபட்டுப் போகிறது. நடிப்பென்றால் நிச்சயம் ஜீவாவுக்கு வித்தியாசமான படம்தான்!

படத்தில் கவரும் இன்னொரு கதாபாத்திரம் ஜீவாவின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ். அப்பாவின் பெயர் வைத்திருப்பதால் ஜீவாவை பெயர் சொல்லி அழைக்காமல் அவர் இவர் என்று மரியாதையாக அழைப்பதும் முகம் பார்த்துகூட பேசாமல் அப்பாவுக்கு உரிய மரியாதையை மகனுக்குக் கொடுப்பதும், ஜீவா சென்ற பிறகு அங்கலாய்ப்பதும் அசத்தல்!
கொஞ்சநேரமே வந்தாலும் ஜீவாவின் தாத்தாவாக வரும் பிரகாஷ் ராஜ் கேரக்டரைப் போலவே கம்பீரம்!

படத்தின் மிகப் பெரிய பலவீனம் திரைக்கதை! இடைவேளை வரையில் கௌரி... கௌரி என்று பில்ட் அப் கொடுத்துவிட்டு இடைவேளையின் போது அவரைக் காட்டுகிறார்கள். மெலிந்த தேகமும் நோஞ்சான் தோற்றமுமாக இருக்கும் சென்றாயந்தான் வில்லன் என்னும்போது சப்பென்று ஆகிவிடுகிறது. ஆள்தான் அப்படி என்றால் ஜீவாவிடம் சும்மா சும்மா அடிவாங்கிக் கொண்டே இருக்கிறார். கடைசியில் யார் கையிலோ அடிபட்டு செத்துப் போகிறார். மிக பலவீனமான கேரக்டரைசேஷன்... ஆனால், சின்னச் சின்ன முக பாவனைகளில் சென்றாயன் அசத்துகிறார். கதாபாத்திரம் வலுவாக இருந்திருந்தால் நிச்சயம் தூக்கி சுமந்திருப்பார் என்று நம்ப வைக்கும் நடிப்பு. அது சரியில்லாததால் வீணாகிவிட்டது!

மனதில் நிற்காத இசை! பின்னணியிலும் ஈர்க்கவில்லை.

இயக்குனருக்கு இது முதல் படம்... சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட மிக நுணுக்கமான டீடெய்ல் செய்து காட்சிகளைச் சுவையாகப் படைத்திருக்கிறார். ஆனால், கோர்வையாக இல்லாததால் சுவை முழுமையாகக் கிடைக்கவில்லை. நல்ல இயக்குனராக வருவார் என்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. அடுத்தப் படத்தில் அதை எதிர்பார்ப்போம்!

Monday, August 8, 2011

போட்டா போட்டி-ஒரு அதிரிபுதிரி எண்டர்டெயினரைக் கொடுத்திருக்கிறது போட்டா போட்டி படக்குழு!

நடிகர்கள்: சடகோப்பன் ரமேஷ், அரிணி மற்றும் பலர்
இசை    : அருள் தேவ்
ஒளிப்பதிவு    : கோபி அமர்னாத்
இயக்கம்      : யுவ்ராஜ்
தயாரிப்பு   & வெளியீடு    : எ.வி.ஆர் டாக்கீஸ்/ஃபிலிக்கர் ஸ்டுடியோ



தையென்று ஏதும் தேவையில்லை... லாஜிக்கெல்லாம் பார்க்க வேண்டாம்... கலகலப்பாக இருந்தால் போதும் என்ற மனநிலையில் உட்கார்ந்தால் உற்சாகமாக வெளியே வரலாம். அப்படி ஒரு அதிரிபுதிரி எண்டர்டெயினரைக் கொடுத்திருக்கிறது போட்டா போட்டி படக்குழு!

பக்காவான பட்டிக்காட்டில் படித்த ஒரே பெண்ணாக இருக்கும் ரஞ்சிதத்தைக் கட்டிக்கொள்ள முறைமாமன்கள் இருவர் போட்டி போடுகிறார்கள். அதில் ஒருவருக்கு ரஞ்சிதத்தின் மீது காதல்... இன்னொருவருக்கு ரஞ்சிதம் அப்பா சேர்த்து வைத்திருக்கும் சொத்து மீது காதல்! ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு என்று ஆளாளுக்கு ஒரு போட்டியைச் சொல்ல ஒரு பொடியன் கிரிக்கெட் வையுங்கப்பா... என்கிறான். ரஞ்சிதமும் அதை ஆமோதிக்க, இருவரும் அணி சேர்த்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதில் ஒரு அணிக்கு பயிற்சியாளராக வரும் சடகோபன் ரமேஷும் ரஞ்சிதமும் லவ்வுகிறார்கள். முடிவு என்ன என்பதை நீங்களே யூகித்து விடலாம். ஆனாலும் யூகிக்காத பல சர்ப்ரைஸ்களைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் யுவராஜ்.

ஆர்.பார்த்திபனின் குரலில் (குரல் மட்டும்தான்!) அறிமுகமாகும் கிராமமும் அதன் மைனரும் ஆரம்பத்திலேயே இது ஜாலி களம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதையடுத்து அடுக்கப்பட்டுக் கொண்டே போகும் காட்சிகளில் கதை நகராவிட்டாலும் கலகலப்பு இருக்கிறது. அதிலும் ஊசிப்பட்டாசாக வந்து விழும் வசனங்கள்தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதனாலேயே சடகோபன் ரமேஷ் தொடங்கி சைடில் நிற்கும் ஆர்டிஸ்ட் வரையில் யாருமே நடிக்காமல் வந்து நின்று வசனம் பேசுவது உறுத்தாமல் போகிறது. அந்த வகையில் இது முழுக்க முழுக்க இயக்குனரின் படம்!

கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாமல் அது எப்படிப்பட்ட ஆட்டம்டா என்று கேட்கும் மைனர் அடுத்தக்கணமே பயிற்சியளிக்க யாரைப் போடலாம் என்று கேட்டுவிட்டு, ‘ஏண்டா... இந்த சச்சின் என்ன பண்றான் இப்போ?’ என்பது லாஜிக்கை மீறிய சரவெடி! இதுபோல படம் நெடுக நிறைய இருக்கின்றன. அதிலும் முட்டாள் மைனரும் அவருக்கேற்ற மங்குணிப் பாண்டி எடுபிடியும் சூப்பரான காம்பினேஷன்.
கதாநாயகியைப் பற்றிச் சொல்வதனால் படத்தில் ரமேஷ் சுமார் பிகர்னு சொன்னே... ரொம்ப சுமாரான பிகர் போலிருக்கே! என்பார். நடிப்பைப் பொறுத்தவரையில் ரமேஷ் சொன்ன வசனம்தான் சரியான விமர்சனம்.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் யுவராஜின் பலமான ஏரியா! குறிப்பாக இரவுக் காட்சிகளில் நாடகத்தனம் இல்லாத ஒளிப்பதிவில் தனித்துத் தெரிகிறார் ஒளிப்பதிவாளர்.
ரொம்ப விளையாட்டாகக் கதை சொல்லிவிடக் கூடாதே என்று சட்டென்று சீரியஸாக மலையை உடைக்கும் அல்லையன்ஸ் கம்பெனியைக் கதைக்குள் கொண்டுவந்து தன் சமூக அக்கறையைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த அக்கறை காரணமாக அணிக்குள் வரும் ஊர் மக்களிடம் விளையாட்டில் அந்த உணர்வைக் கொண்டுவரத் தவறிவிட்டார்.

நம் இந்திய கிரிக்கெட் அணி போலத்தான் இயக்குனர் யுவராஜும்... பலவீனமான
பந்துவீச்சை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பேட்டிங் வரிசையில் பிரகாசிக்கும் (இங்கிலாந்து டூர் பற்றிச் சொல்லவில்லை) நம் அணியைப் போல பலவீனமான ஏரியாக்களை மறக்க வைத்து சிரிப்பு சிக்ஸர் அடித்திருக்கிறார்.


Monday, July 25, 2011

DEIVA THIRUMAGAL MOVIE REVIEW

Starring: Vikram, Anushka, Amala Paul, Santhanam, Direction: AL VijayMusic: G V Prakash KumarProduction: UTV Motion Pictures


deiva-thirumagal-review



“Simpler a thing is, nobler it is”, said the legendary Sathyajith Ray. He would have reiterated his stance now had he watched Krishna (Vikram) in Deiva Thirumagal.
What would you call someone who is an embodiment of all things good, simple and virtuous but appears in the eyes of blemished materialistic world as aberrated? A Deiva Thirumagan, indeed!
DT is a poetical tale of love and affection between a dad and his 5 year old daughter who is the raison d’être of his life. He may be a mentally challenged person to the world but he is after all her dad.
Director Vijay’s caliber as an effective raconteur keeps escalating in every film of his and DT is the latest example. His matured handling of the script and his characters are just testimony to this. It is endearing to watch this tale unravel itself in a very charming and touching fashion.
There are no villains in DT but all the characters are driven by the goodness exuded by its lead Vikram. One of the first frames, where Krishna helps the pickpocket guy sums up his characterization. The subsequent shots of him abiding the traffic signal, wanting to stick to truth only and helping a hatchling to its nest lucidly spells forth his character. In a way, it is Vikram all the way…
What can you say about this actor whose sincerity and talents that are not already known? It is not Vikram you see but it is Krishna and a dad wanting to be with his daughter suffering the pangs of separation. He has done the tightrope walking of playing a mentally challenged person to the hilt. A little sway on any one side would have worked detrimental to him as an actor and the film. The seasoned actor that he is has given a brilliant performance.
Anushka looks ravishing and as a struggling lawyer gets her act right wanting to bring justice to her client. Santhanam’s comedy gels along with the story line and brings in enjoyable lighter moments. Nasser as the intelligent and cunning senior advocate Bhashyam is apt and delivers a veteran’s performance. However it is baby Sara who steals the show next only to Vikram in her angelic looks and performance. There is a serene look about her which helps the role majorly and her understanding of her dad and playing to his inadequacies warrant accolades. Amala Paul has a small role and delivers it right. The supporting casts of Y Gee Mahendra, Sachin Khedekar, Karthik Kumar, Krishna Kumar, Surekha, M R Kishore and Priya have also essayed their roles quite effectively. .
Setting the right kind of mood through his camera work has been cinematographer Nirav Shah’s forte which he has adhered to in DT. Nirav has had a field day in Vizhigalil Oru Vaanavil number which is aesthetics at its best. Anushka’s expressions in this sequence and the oblivious Vikram behind her on the bike are a revelation. The sleek and discreet editing helps the proceeding in a big way. G V Prakash’s scores are already chartbusters and each track adds significant value to the film. Ore oru oorukkula number is sure to be children’s favorite
Dialogues like “Vakil kitayum doctor kittayum poi pesa koodathu, aana vakillum doctorum poi pesalam” and ‘Saamikku amma kedayaada’ are noteworthy. There are quite a scenes that tug at your heart’s strings and almost all of them happen between the dad and the daughter, the cream being the one between them in the court room towards the end and that on the first day of Sara’s school where the duo communicate with each other in sign language.
On the flip side a few scenes involving M S Bhaskar and the helper don’t add value to the progress of the film. However considering the overwhelming positive feeling that the film evokes in its entirety, these foibles can be forgiven.
After a long while, DT gives the satisfaction of watching a film without cringing in your seats or worrying how it would appeal to the young population. In short Deiva Thirumagal is a well nuanced film that will appeal to everyone who has their heart and feelings in the right place.

Verdict: An emotional tale between a father and a daughter well told


KANCHANA MOVIE REVIEW

Starring: Raghava Lawrence, Sarath Kumar, Lakshmi Rai Direction: Raghava LawrenceMusic: ThamanProduction: N Radha



kanchana-review

                A sequel, not really! It is just the return of the character from the successful Muni. The original had managed to pack entertainment; spooks, fun and dance into an almost delectable capsule and the sequel looks at doing the same thing. So, is it more of the former or something that surpasses the precedent set by the original?
Kanchana is about a spirit and its thirst for vengeance; well, we all knew that, didn’t we. No surprises there. Raghava Lawrence reprises the role of the constantly terrified young man from Muni; we know what to expect here too. The novelty of seeing a hero as a coward wears off very soon because we have already seen it in Muni. But, Kanchana ends its similarities with Muni with these minimal points. All other aspects of the film are original. The plots of most scary films carry a flashback which details the reasons for the spirit lingering on in the world of humans even after death. It is this flashback which earns sympathy or wrath of the audience for the spirit and lends credence to the entire story of vengeance. Full credit to the makers of Kanchana for putting in substance and message into the flashback which takes the movie a notch above hotchpotch horror films. Much else about the plot cannot be revealed here because, being a suspenseful horror flick, they might really be spoilers for those who want to catch up with the film in theaters.
As is accepted in horror flicks; logical correctness of the central plot or credibility of the ghost/spirit’s acts through others are matters that should not be discussed, only experienced. And, Kanchana also demands that level of submission and acceptance from its viewers. First rule for a horror flick to strike it off with an audience is its ability to give the spooks; else it all ends up as a high and dry ride. Kanchana aces this rule; it does manage to give the chills and thrills wherever it intends to. The ‘experimental’ scene where Kovai Sarala and Devadarshini try to confirm the presence of a spirit in their midst is one of those instances. The good thing about the entire affair is that the horror or spook quotient is always maintained in good taste! What does that mean? The film does not contain any manipulative or artificial instances where deliberately positioned cameras, sudden shrieks and elaborate shots from behind a character create a sense of impending disaster. The director is honest with his audience. Yes, there are a few instances of old school horror, with graphics and weird forms appearing out of the blue, but it is strictly limited. But, it is not all about horror and spooks. There is a generous sprinkling of humor with Raghava Lawrence handling the portions. Lakshmi Rai seems to be around only for the glamour. The film looks sunny and cheerful in these portions, especially when he puts on his dancing shoes.
Horror films demand very convincing portrayals from the entire cast; everyone has to wear completely terrified and bewildered expressions for the excitement to get to the viewer. In that respect everyone has done a neat job. It is not too difficult for Lawrence, one would think, after having gone through the routine in Muni. But, the climax portions where he is possessed might have been physically demanding. Kovai Sarala repeats her mother act too and pulls it off with her abundant experience. Devadarshini too is more than just convincing with her portrayal. The ladies along with Lakshmi Rai have had to literally carry Raghava Lawrence throughout the movie which, while still being a result of spooky situations, does evoke a smile. Sriman does not have much to do and one cannot help but think that Lakshmi Rai is worth more than the part that she has got here, but that is what the script demands.
The surprise packet however is Sarath Kumar. Who would have thought that an actor known for his physique and action would pass off so well in the role of a transgender? What would have made him take up this role? Well, the only guess is that it is one character that does not conform to the long standing screen stereotype of transgenders; people who clap their hands in funny manners and ask for money from every second person. The film has shown them as people with immense self-respect and ideals while also pointing out that being a transgender is not a matter of choice but a congenital condition which cannot be helped. The director deserves a big round of applause for introducing this perspective.
The only let downs in the entire outing are the music by Thaman. While the songs pass muster, it is the BGM which fails to add spunk to the spooky scenes; more was expected from this promising young composer. The graphics too could have been better, but we understand the budget limitations.
Overall, Kanchana is a ride of spooks and chills, interspersed with moments of fun and dance. The good thing is that the spooks and chills have not been provided just for the heck of it; they look convincing and have an effect on the viewer. It may not be a classy piece of cinema, but it does manage to engage a viewer who is willing to give himself in to the central concept of the supernatural.

Verdict: Spooks without offending the senses – engaging watch!