Tuesday, November 29, 2011

மயக்கம் என்ன- ஒற்றை ஆளாக மொத்தப் படத்தையும் தலையில் தூக்கிச் சுமக்கிறார் தனுஷ்


ரு வெற்றி, ஓர் அங்கீகாரம்... அதற்காக ஏங்கும் ஒருவனைப் பற்றிய கதை என்ற அதே 7 ஜி ரெயின்போ காலனி கதை ஒன் லைனில் வேறொரு பாணியில் எடுத்திருக்கிறார் செல்வராகவன். ஆனால், தனுஷின் உழைப்பு இந்தப் படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.
அமெச்சூர் போட்டோகிராபரான தனுஷுக்கு கனவு மிகப் பெரிய போட்டோகிராபராவதுதான். அவருடைய ஆண்-பெண் நட்பு வட்டத்துக்குள் ஒரு நண்பனின் கேர்ள் பிரெண்டாக நுழைகிறார் ரிச்சா. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் இருவருக்குள்ளும் ஒரு கெமிஸ்ட்ரி ஓடுகிறது. ஒரு கட்டத்தில் அது காதலாக, நட்புக்கு துரோகம் செய்வதாக எண்ணி மறுக்குகிறார் தனுஷ். இதற்கிடையே அவர் எடுத்தப் போட்டோ ஒன்றை தன்னுடையது என்று சொல்லி பேர் வாங்கிவிடுகிறார் ஒரு பிரபல போட்டோகிராபர். தனுஷின் காதல் என்னவானது... தன் துறையில் தனுஷ் ஜெயித்தாரா என்பதே மீதிக் கதை!
ஒற்றை ஆளாக மொத்தப் படத்தையும் தலையில் தூக்கிச் சுமக்கிறார் தனுஷ். ஆரம்பத்தில் விளையாட்டுத் தனமாக அலையும்போதும் அவமானங்களை மென்று விழுங்கிக் கொண்டு அங்கீகாரத்துக்காக அல்லாடும்போதும் தனுஷின் உழைப்பு அபாரமாக இருக்கிறது. காதலை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தவிக்கும் காட்சிகளில் கண்களில் தெரிகிறது அவருடைய உணர்வுகள்! அதேபோல, கால ஓட்டத்தின் மாற்றங்களை அழகாகப் பிரதிபலிக்கிறார்.
ரிச்சாவுக்கு கரிய பெரிய கண்கள்... அதிலேயே ஆயிரம் பக்க வசனங்களைப் பேசிவிடுகிறார். தனுஷுக்கு இணையாக நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர்... அழகாகச் செய்திருக்கிறார்.
தனுஷின் நண்பர்கள் வட்டம் இயல்பாக இருக்கிறது. ரிச்சாவை கேர்ள் பிரெண்டாக நினைத்து பழகி ஏமாந்து நிற்கும் நண்பன் செம ஃபிட்!
படத்தின் இன்னொரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்களில் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்ட ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார். அதிலும் மவுனமாக நிற்கும் பல இடங்களில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிக்கிறது. வெல்டன் பிரகாஷ்!
கதையே போட்டோகிராபரைப் பற்றியது என்பதால் கேமரா மிரட்டுகிறது. இயற்கைக் காட்சிகளாக விரியும் பல இடங்கள் நிஜமான பெயிண்டிங் உணர்வு! ராம்ஜி நூறு சதவிகிதம் உழைத்திருக்கிறார்.
செல்வராகவன் 
நேர்கோட்டில் கதை சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் சினிமா ரசிகனுக்கான தேவைகளுக்காக முன்பாதியில் பல கலகலப்பு எபிசோட்களைச் சேர்த்துவிட்டார். அதனாலேயே சீரியஸாகச் செல்லும் இரண்டாவது பாதி மெதுவாகத் தோன்றுகிறது. காட்சிகள் வேறாக இருந்தாலும் தனுஷ், ரிச்சா இருவருக்குமான உறவும் பிணக்கும்தான் சொல்லப்படுகிறது என்பதால் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. அதனாலேயே ரசிகர்கள் படத்தோடு ஒன்றாமல் தவிக்கிறார்கள்.  இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் செல்வராகவன் இன்னும் அசத்தியிருக்கலாம்!

Thursday, November 17, 2011

விஜய்க்கு நண்பனில் நான்கு கெட்-அப்ஸ்!


ந்திரனுக்குப் பிறகு ஒரு ஆஃப் பீட் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்த இயக்குனர் ஷங்கர்  3 இடியட்ஸ் படத்தை `நண்பனாக` ரீமேக் செய்து முடித்து விட்டார். தற்போது ஜெட் வேகத்தில் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நண்பன் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என ஷங்கர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
 
இதற்கிடையில் நண்பன் படத்துக்காக இத்தாலியில் கடைசியாக படமாக்கப் பட்ட பாடலில் விஜய்யும் இலியானாவும் நடித்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் எந்திரனில் ரஜினியின் சிட்டி   ரோபோ கெட்-
அப்,  கமலின் `இந்தியன் தாத்தா` கெட்-அப் ஆகிய இரண்டு தோற்றங்களில்  விஜய் வருகிறார் என்று தகவல்கள் கசிந்தன.

ஆனால் இயக்குனர் ஷங்கர் இரண்டு அல்ல நான்கு கெட்-அப்புகள் என்று கூறியிருக்கிறார். “அந்தப் பாடலில் ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாத நாலுவித கேரக்டரில் விஜய் வருகிறார். அவை என்ன கெட்-அப்புகள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. சாரி ”என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Friday, November 4, 2011

7 ஆம் அறிவு


எதிர்பார்ப்பு ஈடேறவில்லை என்பதுதான் படம் பார்த்தபின் ஏற்படும் உணர்வு!


நடிகர்கள் : சூர்யா,ஸ்ருதிஹாசன்,ஜானி ட்ரி நுயன்
இசை    : ஹாரீஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு    : ரவி k சந்திரன்
இயக்கம்      : முருகதாஸ்

விண்ணை முட்டும் எதிர்பார்ப்புகளோடு வந்திருக்கும் படம்..! ஆம் அறிவு
மறக்கப்பட்ட தமிழரின் பக்கங்களைச் சொல்லும் படம் என்ற கேப்ஷனும் சூர்யா முருகதாஸ் கூட்டணியும் எதிர்பார்ப்பை எகிற வைத்தனஆனால்எதிர்பார்ப்பு ஈடேறவில்லை என்பதுதான் படம் பார்த்தபின் ஏற்படும் உணர்வு!
சீனாவின் ஷாவ்லின் கோவிலில் தொடங்குகிறது படம்அந்தக் கோவிலில் தெய்வமாக இருப்பவர் தமிழகத்தில் இருந்து சீனாவுக்குச் சென்ற பல்லவ மன்னன் போதி தர்மன் என்ற செய்தியை அடுத்து போதி தர்மன் சீனாவுக்குச் சென்றதும் அங்கே அவர் செட்டில் ஆனதும் காட்சிகளாக விரிகிறது.அப்பட்டமான டாகுமெண்டரிதனம்அதை மேலும் வலுப்படுத்துவது போல இருக்கிறது பின்னணி குரல்!
அந்த போதி தர்மன் கற்றுத் தந்த நோக்கு வர்மம்தற்காப்புக் கலையில் தேர்ந்த ஒருவன் சீன அரசின் ஆணைப்படி (சென்சாரில் மியூட் பண்ணினாலும் சீன அரசு என்பது புரிகிறதுதமிழர்களை... குறிப்பாக ஸ்ருதிஹாசனைக் கொல்ல வருகிறான் என்று கதையை ஆரம்பிக்கிறார் முருகதாஸ்அவரை ஏன் கொல்ல வேண்டும் என்றால் ஸ்ருதிதான் டி.என்.ஆராய்ச்சி மூலமாக போதி தர்மனின் வழித் தோன்றல்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்அவருடைய ஆராய்ச்சியால் இந்தியாவில் பரவ விடத் திட்டமிட்டிருக்கும் நோய் கிருமிகள் பரவாமல் போய்விடுமோ... அதை வைத்து பிசினஸ் பண்ண நினைக்கும் தன் திட்டம் பாழாகிவிடுமோ என்ற சீனாவின் பயம்தான் காரணம்போதி தர்மனின் வழித் தோன்றல் மூலம் அவரை மீண்டும் உருவாக்கி பயோ வார் நடத்தத் திட்டமிடும் சீனாவை எப்படி முறியடிக்கிறார் ஸ்ருதி என்பதுதான் படம்!
சொல்லும்போது கோர்வையாகத் தெரிந்தாலும் படத்தில் இவ்வளவு கோர்வை இல்லை. டாகுமெண்டரி ஃபீலிங்கில் படம் நெடுக சரித்திர, விஞ்ஞான, மருத்துவ, மரபணுச் சோதனை பற்றிய கருத்துகளை யாராவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலவீனமே இந்த விவரணைகள்தான்..! அதிலும் ஆரம்பக் காட்சிகளாக வரும் போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றுப் பாடம் என்றால் கடைசியாக வரும் போதி தர்மன் மறு உருவாக்கம் அப்படியே தலைசுற்றும் சயின்ஸ் கிளாஸ்! எங்கே புரியாமல் போய்விடுமோ என்ற கவலையில் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்ன விதத்தில் முருகதாஸுக்கு வெற்றிதான். ஆனால், எல்லாம் புரியுது... ஆனா, சுவாரஸ்யமாக இல்லையே என்று கடைக்கோடி ரசிகன் சொல்வது அவருக்கு மைனஸ்தான்!
போதி தர்மன் மற்றும் அவருடைய வழித் தோன்றலாக அரவிந்தன் என்ற சர்க்கஸ் கலைஞன் ஆகிய வேடங்கள்
சூர்யாவுக்கு! உடலை இறுக்கமாகக் கட்டி வைத்துக் கொண்டு அழகுப் போட்டி ரேஞ்சுக்கு அங்கும் இங்கும் நடக்கிறார். போதி தர்மன் வேடத்துக்கான உழைப்பின் களைப்பு அரவிந்தன் வேடத்தில் தெரிகிறது. பொலிவு மிஸ்ஸிங் சார்! கவனமாக இருங்க! சர்க்கஸ் கலைஞராக அவருடைய உழைப்பு அபாரமாக இருக்கிறது. மற்றபடி ஆட்டம் பாட்டம், ஆக்‌ஷன் காட்சிகளில் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கியிருக்கிறார். படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்னால் இருபது நிமிடங்கள் சூர்யா இல்லவே இல்லை... ஸ்ருதி மீதுதான் பயணிக்கிறது. கதை. ஆனால், க்ளைமாக்ஸ் சண்டையில் ஸ்கோர் பண்ணிவிட முடியும் என்ற தைரியத்துக்கு பாராட்டலாம்.
ஸ்ருதி அழகாக இருக்கிறார். தமிழ்தான் கொஞ்சம் தடுமாறுகிறது. சூர்யாவின் பக்கத்தில் நிற்கும்போது உயரமாக இருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறார். எக்ஸ்பிரஷன் ஏரியாவில் அப்பாவிடம் கொஞ்சம் க்ளாஸ் வைத்துக் கொள்ளுங்கள் மேடம்!
படத்தின் அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டு செல்பவர் வில்லன் ஜானி ட்ரி நுயன் தான்! அமர்த்தலான அவருடைய நடையும் வசியம் செய்யும் கண்களும் அவருக்கு பெரும் பலம். மிகக் குறைவான வசனங்களோடு அவர் படம் நெடுக அசத்துகிறார்.ஹாரீஸின் இசையில் பாடல்களில் பழைய வாசனை..! படத்துக்கு பெரும் ஸ்பீட் பிரேக்கர்கள்!
பீட்டர் ஹெயினின் சண்டைக்காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.மிக விளக்கமாகவும் விவரணையோடும் பல விஷயங்களைச் சொல்லியிருந்தாலும் மனதுக்குள் எழும் சில ஏன்... எதற்கு... எப்படிகள்..?
ஸ்ருதிஹாசன் சூர்யாவை பின் தொடர்வது போலவே தெரியவில்லையே... அவர்தான் ஸ்ருதியின் இலக்கு என்னும்போது சும்மா இருப்பதும் சூர்யா அவரைத் தேடி அலைவதுமாக இருப்பது ஏன்..?இந்தக்கதைக்கு நடுவே இலங்கைத் தமிழர் விவகாரத்தையெல்லாம் இழுக்கிறீர்களே... எதற்கு..?
சீனாவில் இருந்து வந்து இறங்கும் வில்லன் ஜானி சென்னையிலேயே புழங்கிய ஆட்டோகாரர் ரேஞ்சுக்கு சந்து பொந்தெல்லாம் செல்ஃப் டிரைவிங்கில் சுற்றி வருவது எப்படி..?
முருகதாஸ் கடுமையாக உழைத்திருக்கிறார்... ஏராளமான தகவல்களை திரட்டியிருக்கிறார்... அவை எல்லாவற்றையும் வீணாக்காமல் கொட்டிவிட நினைத்துவிட்டார்... அங்கேதான் சிக்கலாகி விட்டது.
watch the awesme song........
and ur comments pls...........
http://www.youtube.com/watch?v=ww9eqUUT018

Tuesday, November 1, 2011

வேலாயுதம் உண்மையிலேயே அதிரடி மசாலாதான்!


நடிகர்கள்: விஜய்,ஜெனிலியா,ஹன்சிகா மோத்வானி,சந்தானம் மற்றும் பலர்
இசை    : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு    : பிரியன்
இயக்கம்      : ஜெயம் ராஜா


நீண்டநாட்களாக ஒரு அதிரிபுதிரி வெற்றிக்காகக் காத்திருக்கும் விஜய் நடித்திருக்கும் படம். அரசியல், அடுத்தடுத்த பிரச்னைகள் என்று சிக்கித் தவித்துக் கொண்டிருந்த விஜய்க்கு உடனடி ரிலீஃபாக வந்திருக்கும் வேலாயுதம் உண்மையிலேயே அதிரடி மசாலாதான்!

பல ஆண்டுகளுக்கு முன்பே ப.திருப்பதிசாமி கதை திரைக்கதை இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆசாத் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டு வேலாயுதத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜா.

தமிழகத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகள் அதற்காக உள்துறை அமைச்சரின் உதவியோடு சென்னையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள். அதன்படி பள்ளிக்கூட பஸ்ஸில் முதல் குண்டு வெடிக்கவும் செய்கிறது. சென்னையில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருக்கும் ஜெனிலியா இந்த கும்பலின் அராஜக வேலை ஒன்றை துப்பறிய அவரைக் குத்திக் கிழிக்கிறார்கள் மூன்று அடியாட்கள். ஜெனிலியாவிடம் அடுத்த வெள்ளியன்று இன்னொரு குண்டு வெடிக்கும் என்ற தகவலையும் சவடாலாகச் சொல்கிறார்கள். அவர்கள் செல்லும் காரில் இருக்கும் பெட்ரோல் பைகள் வெடிக்க, மூவரும் இறக்கிறார்கள். கத்திக்குத்து காயத்தோடு கிடக்கும் ஜெனிலியா ஒரு பேப்பரில் வெள்ளிக்கிழமை நடக்கப் போகும் குண்டு வெடிப்பைத் தடுப்பேன்... எதிரிகள் தப்ப முடியாது என்று எழுதி கீழே வேலாயுதம் என்று எழுதி வைக்கிறார். யார் அந்த வேலாயுதம் என்ற பரபரப்பு எழுகிறது.

பவுனூர் என்ற கிராமத்தில் அண்ணன் தங்கை பாசத்துக்கு இலக்கணமாக இருக்கும் விஜயும் சரண்யா மோகனும் சென்னைக்கு ரயில் ஏறுகிறார்கள். விஜய் பெயர் வேலாயுதம். மாமா, அத்தை, மாமா மகள், நண்பர்கள் சகிதம் சென்னை வந்து இறங்கும் விஜய், தங்கையின் பையைத் திருடும் திருடனைப் பிடிக்க பார்சலில் வந்த பைக்கை எடுத்துக் கொண்டு துரத்துகிறார். விஜயைத் துரத்தும் போலீஸ்காரர் விஜயிடம் பேர் கேட்க, வேலாயுதம் என்று சொல்கிறார். ஸ்டேஷனுக்கு வெளியே கொண்டு விடப்பட்ட பைக் வெடிக்கிறது. வேலாயுதம் புகழ் மேலும் அதிகமாகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற தற்செயல் சம்பவங்கள் நடக்கின்றன. வில்லன் குரூப் குழப்பமாகிறார்கள். விஷயம் தெரிந்த ஜெனிலியா விஜயை வேலாயுதமாக்க திட்டமிடுகிறார். விஜய் மறுக்கிறார்.

இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதைத் தெரியாமல் இருக்க நீங்க்ள் ஒன்றும் பச்சைக்குழந்தை இல்லை என்பதால் இதற்கு மேல் கதை வேண்டாம்!

வேலாயுதமாக விஜய் வெளுத்துக் கட்டியிருக்கிறார். தங்கை பாசத்தைப் பொழியும் கிராமத்து காட்சிகளில் காமடியில் பின்னி எடுக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனல் பறத்துகிறார். பாடல் காட்சிகளில் சுழன்று ஆடுகிறார். எமோஷனலாக காட்சிகளில்தான் கொஞ்சம் தடுமாறுகிறார். ஆனால், தன் பலம் என்ன என்பதைத் தெரிந்து விளையாடியிருக்கும் விஜய்க்கு இந்தப் படம் ஒரு மைல் கல்தான்!

ஒன்றுக்கு இரண்டாக நாயகிகள்... ஜெனிலியாவுக்கு கொஞ்சம் கதையோடு ஒட்டிய கேரக்டர்... அதனால் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஹான்சிகா மொத்வானிக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே வேலை... படத்தில் விஜய் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று... நான் சும்மாவே காட்டுவேன்... நீ காட்டு காட்டுனு கேட்டா... என்ன பண்றது என்று இருக்கிறது. அது ஹான்சிகா மொத்வானிக்குத்தான் ரொம்பப் பொருத்தம்... சும்மா காட்டு காட்டு என்று காட்டுகிறார்! வெண்ணெய் போல இருக்குது பொண்ணுங்கற வசனத்தை ரொம்ப நாளைக்கு பேசமுடியாது அம்மணி... கொஞ்சம் நடிக்க ஆரம்பிச்சுடுங்க!

காமடிக்கு குத்தகை சந்தானம்... விஜயோடு சேர்ந்திருக்கும் போதும் தனியாவர்த்தனம் செய்யும்போதும் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். திருடனாக மாறுவதற்கு அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அம்பேல் ஆகும்போது சிரிப்பு பீறிடுகிறது. வசனங்களில் கவுண்டமணி வாரிசாகவே மாறிவிட்டார். செம கலாய்ப்பு!

அந்நிய சக்திகளாக வரும் வில்லன்கள்தான் ஒட்டவே இல்லை... உள்ளூர் உள்துறை அமைச்சருக்குக் கூட தெரியாத முகம் வருவது ஒட்டாமல் போகிறது. வில்லன் சரியில்லாததால் ஹீரோயிசமும் கொஞ்சம் வீக் ஆகிறது. ஆனால், அதை உணராத அளவுக்கு எமோஷனலாக இருக்கும் காட்சிகளால் கொஞ்சம் தப்பிக்கிறது.

சரண்யா மோகன், சாயாஜி ஷிண்டே, எம்.எஸ். பாஸ்கர், சூரி, இளவரசு, ராகவ் என்று பெரிய பட்டியலாக இருந்தாலும் எல்லோருடைய கேரக்டர்களும் மனதில் நிற்கும் வகையில் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

இசை விஜய் ஆண்டனி... வழக்கம்போல குத்துப் பாடல்களால் கும்மாளம் போட்டிருக்கிறார்... விஜய் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் துள்ளல் இசை! ஆனால், வெரைட்டி மிஸ்ஸிங்!

வசனம் சுபா... ஒரு மசாலா படத்துக்கு என்ன அளவு தேவையோ அந்த அளவு இருக்கிறது. வெல்டன்! அதிலும் கூரைமீது விஜய் ஓடும்போது ஓடு சரிந்து கீழே பேசும் கட்சிக்காரரின் தலையில் விழுகிறது. இது எதிர்கட்சிக்காரர்களின் சதி என்று அவர் குற்றம் சாட்ட விஜய் உடனே, நல்லவேளை நான் ஆளுங்கட்சி என்று டைமிங்கில் சொல்வது ஜர்னலிஸ்டிக் டச்! அதேபோல், வில்லனை மடக்கும் போலீஸ் காரர் முஸ்லீம் என்று தெரிந்ததும் அவன் நான் நீங்க நல்லாயிருக்கணும்னும் சேர்த்துதான் போராடுறேன் என்று சொல்ல பதிலுக்கு அந்த போலீஸ் அதிகாரி, நாங்க நல்லாத்தான் இருக்கோம்... உங்களுக்கு புடிச்சவனா இருந்தாலும் பின்லேடனை உங்களால் பாதுகாக்க முடியலை... எங்களுக்கு புடிக்கலைன்னாலும் கசாப்பை நாங்க பத்திரமாகத்தான் பாத்துக்கறோம் என்று பொலிடிகலாகவும் பஞ்ச் அடிக்கிறார்கள் வசன இரட்டையர்கள்!

மாஸ் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் சர்வ இலக்கணங்களோடு நூறு சதவிகிதம் பொருந்திப் போகிற திரைக்கதையை அமைத்திருக்கும் எம்.ராஜாவுக்கு இது மிக முக்கியமான படம். கொஞ்சம் அளவு மிஞ்சியிருந்தாலும் அலுப்பு தட்டாத வகையில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தே படைத்திருக்கிறார்.

இந்த தீபாவளியில் வேலாயுதம் தவுசண்ட் வாலா பட்டாசாக வெடித்திருக்கிறது!