Tuesday, September 6, 2011

மங்காத்தா... இரண்டாவது பாதி உள்ளே... முதல் பாதி வெளியே..!


ஜீத் நடிக்கும் 50 வது படம்! பூஜையில் இருந்தே நெகட்டிவ் ரோல் என்ற அறிவிப்போடுதான் படம் ரெடியானது என்பதால் எந்த அளவு நெகட்டிவ் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டிய படம்!

ஆனால், ஒரு துளிகூட கருணையோ இரக்கமோ இல்லாத பணம் மட்டுமே ஆசையாக அலையும் ஒரு பேராசைக்காரனின் பாத்திரம் ரொம்பவே புதிதாக இருக்கிறது. மாஸ் ஹீரோவான ஒருவர் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அதில் கொஞ்சமும் பின் வாங்காமல் நடித்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான்!

ஐ.பி.எல். போட்டியின் ஃபைனல் போட்டிக்காக நடத்தப்படும் சூதாட்டத்துக்காக ஒரு கிளப்புக்குக் கொண்டுவரப்படும் 500 கோடி ரூபாயை நடுவில் அடித்துக்கொண்டு போக திட்டமிடும் ஐவர் குழுவின் அட்டகாசம் ஒருபக்கம்... இந்த சூதாட்டத்தைக் கண்டுபிடிக்க ஊர் ஊராகப் போராடும் போலீஸ் அதிகாரி அர்ஜூன் இன்னொரு பக்கம்...

இந்த உள்ளே வெளியே மங்காத்தாவில் யாருக்கு வெற்றி என்பதுதான் மங்காத்தா!
க்ரே தலைமுடி... நாலுநாள் தாடி... சதா புகையும் சிகரெட்... எந்நேரமும் குடித்துக் கொண்டே இருப்பது என்று முழு வில்லன்! அதிலும் பணத்துக்காக எதையும் செய்யும் ஆள். த்ரிஷாவைக் காதலிப்பது, நண்பர்களோடு கூத்தடிப்பது என்று எல்லாவற்றிலும் சுயநலம் கடைவாயோரம் ஒழுகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் அடியாளிடம் கன்னத்தில் பளாரென்று அடி வாங்குவது, அர்ஜூனை ஆக்‌ஷன் கிங் என்று பாராட்டுவது, பிரேமுடன் சரிக்கு சரி காமெடி செய்வது, பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு திருதிருவென்று விழிப்பது என்று ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடித்திருக்கிறார். அதேபோல வீண் புகழ்ச்சியும் இல்லை! வெல்டன்!

நாயகிகளில் த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்று எல்லோருக்குமே ஊறுகாய் ரோல்தான். ஆனாலும் சரியான இடத்தில் சரியான அளவில் வந்து போகிறார்கள்.

அர்ஜூன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் க்ளைமாக்ஸ் திருப்பம் நிச்சயம் எதிர்பாராத அதிரடிதான்!

பிரேம்ஜி, வைபவ், சுப்பு, ஜெயபிரகாஷ் என்று ஏகப்பட்ட நடிகர்கள்... எல்லோரையும் ஒன்றாக அறிமுகப்படுத்தி அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் பாராட்டலாம்.
யுவன் பாடல்களில் ராஜ வாசனை..! ஆனாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
சக்தியின் ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே வழக்கம் போல அசத்தல்!

எழுதி இயக்கியிருக்கும் வெங்கட் பிரபு சூதாட்டத்தின் பொருளாதாரத்தையோ அந்த உலகத்து நடவடிக்கைகளையோ கொஞ்சமும் கவலைப்படாமல் அதில் கிடைக்கும் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கதை பண்ணியிருக்கிறார். முதல் பாதியில் இலக்கின்றி அலையும் கதை இரண்டாவது பாதியில் வேகம் எடுக்கிறது.

மங்காத்தா... இரண்டாவது பாதி உள்ளே... முதல் பாதி வெளியே..!

No comments:

Post a Comment

welcomeee