Tuesday, August 30, 2011

யுவன் யுவதி சந்தானத்தைக் கொண்டு வந்ததால் நாம் பிழைத்தோம்!


ட்டாய கல்யாணத்தில் இருந்து தப்பிக்க அமெரிக்கா செல்ல நினைக்கும் யுவனும் காதலித்தவனைக் கல்யாணம் செய்துகொள்ள அமெரிக்கா செல்ல நினைக்கும் யுவதியும் அமெரிக்க தூதரக வாசலில் சந்தித்துக் கொண்டால் எப்படியிருக்கும்? என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் (கதை வசனம்) சுவாரஸ்யமான கற்பனைதான் கதை! ஆனால், இதைச் சொன்ன விதத்தில் அத்தனை அசமஞ்சம்!

உசிலம்பட்டிக்காரனான பரத் ஊரையே வெறுக்கிறார். காரணம் அவங்க காட்டுமிராண்டிப் பய கூட்டம் என்பதுதான். அதனால் அவர் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆக நினைக்கிறார். அதற்கான முயற்சியில் இருக்கும்போது ரீமா கலிங்களைச் சந்திக்கிறார். அவரும் அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வந்தவர். பாஸ்போர்ட் தொலைந்து போக, விசா மறுக்கப்படுகிறது. வரிசையில் நிற்கும்போதே சண்டையிட்ட இருவரும் மேலும் முறைத்துக் கொள்கிறார்கள். ஆனால், பரத் ரீமா மீது காதல் வசப்படுகிறார். பாஸ்போர்ட் வாங்க ரீமா ஏதேதோ கோமாளித்தனங்களைச் செய்கிறார். கடைசியில் போலீஸில் புகார் செய்ய, அங்கே வரும் பரத் தான் உதவுவதாகச் சொல்ல இருவரும் ஒன்றாகச் சுற்றுகிறார்கள்.
நடுவே பரத்தின் அப்பா சம்பத், பரத்துக்கு நீதிபதியின் மகளை பார்த்து  பேசிமுடிக்க பரத், அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறார். ஆனால், வலுக்கட்டாயமாக அவரை உசிலம்பட்டிக்கு அழைத்துச் செல்லும் சம்பத், தன் மகனின் காதலி என்று நினைத்து ரீமாவையும் அடைத்து வைக்கிறார். பரத் அதைக் கேட்டு ஓடிச் சென்று ரீமாவை மீட்க, அவரோ பரத் மீது கோபத்தை வீசிவிட்டுச் சென்றுவிடுகிறார். (ஹலோ... இங்கே இடைவேளைதான்... அதுக்குள்ளே டயர்ட் ஆகிட்டா எப்படி?)

பத்து மாத இடைவெளிக்குப் பிறகு சம்பத் தன் மகனைத் தேடிக் கொண்டிருக்க செஷல்ஸ் தீவில் செட்டில் ஆகியிருக்கிறார் பரத். அங்கே திரும்பவும் ரீமாவைச் சந்திக்க நேரிடுகிறது. மறுபடியும் காதலைப் புதிப்பித்து உசிலம்பட்டிக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார்.

சுவாரஸ்யமான முடிச்சை ஜவ்வு இழுவை இழுத்து நம்மைச் சோதித்து விடுகிறார் படத்தின் இயக்குனர் குமரவேல். காட்சிகளில் எந்தப் புதுமையும் இல்லாமல் பரபரப்பும் இல்லாமல் சவசவ என்று நகருகிற கதையில் பரத்தின் நண்பனாக வரும் சந்தானம்தான் ஒரே ஆறுதல்! நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு செஷல்ஸ் தீவுக்கும் சந்தானத்தைக் கொண்டு வந்ததால் நாம் பிழைத்தோம்!

பரத் ரொம்ப மெனக்கெடாமல் வந்து போகிறார். இந்த படத்துக்கு இவ்வலவு போதும் என்று நினைத்துவிட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு மிக மெத்தனமான நடிப்பு. பாடல் காட்சிகளில் நடனம் ஆடும்போது மட்டும் கொஞ்சம் உற்சாகம் தெரிகிறது.ரீமா கலிங்கள் இந்தப் படத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத சாய்ஸ். பல நேரங்களில் பரத்துக்கு சீனியராகத் தோற்றம் தருகிறார். 

படத்தின் பெரிய ரிலீஃப் சந்தானம்தான். அதிலும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் அடிக்குரலில் கத்தாமல் இருப்பது பெரிய ஆறுதல். என்னதான் சச்சின் டெண்டுல்கர் கொச்சினில் வந்து செட்டில் ஆனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கர்னு கூப்பிட மாட்டாங்க என்கிற ரேஞ்சில் அவர் அடிக்கும் பஞ்ச்சுக்கு தியேட்டர் நாற்காலிகளே சிரிக்கின்றன.

இசை விஜய் ஆண்டனி. இரைச்சல்தான் அதிகமாக இருக்கிறது பின்னணி இசையில்! பாடல்களில் மறக்காமல் இருப்பதால் கொஞ்சம் மனதில் நிற்கும் மெலடி!திரைக்கதையில் பெரிய பெரிய ஓட்டைகள் இருப்பதால் படம் ஒட்டவே இல்லை. குமரவேல் சார்... ஸாரி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

No comments:

Post a Comment

welcomeee